tamilnadu

கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தற்கொலை முயற்சி: சிறுமி பலி

திருப்பத்தூர், ஜூன் 4- திருப்பத்தூரில் கந்துவட்டி கொடுமையால்  குடும்பமே விஷம் அருந்தி தற்கொலைக்கு  முயன்றது. இதில் 14 வயது சிறுமி பலியா னார். திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டைச் சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் அதே  பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.  இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள்கள் ரேணுகாஶ்ரீ (14), யோகாஶ்ரீ (7). அண்ணாமலை வியாபாரத்திற்காக அதே  பகுதியைச் சேர்ந்த கோவிந்தன்(48), அவரது  மனைவி புஷ்பா (32) மற்றும் ரமேஷ் (42) என்ப வர்களிடம் தனித்தனியாக கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

கொரோனா பொதுமுடக்கத்தினால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடையைத் திறக்க முடியாமல் அவர் மிகவும்  சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு பணம் கொடுத்த மூவரும் அசலையும் வட்டியை யும் மொத்தமாக கேட்டு  தகராறு செய்துள்ளனர். அதற்கு அண்ணாமலை தற்போது என்னி டம் பணம் இல்லை விரைவில் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் மூவரும் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உங்களை அவ மானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி யுள்ளனர். இதனால் மனமுடைந்த அண்ணாமலை  மனைவி மற்றும் மகள்களுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். குழந்தைகளின் சத்தம் கேட்டு அங்கு  வந்த அக்கம்பக்கத்தினர் நால்வரையும் மீட்டு  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் குழந்தைகள் இருவரும் வேலூரில் உள்ள  தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகாஶ்ரீ  உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து,  ரமேஷ்,  கோவிந்தன் ஆகியோரை கைது செய்துள்ள னர். தலைமறைவான புஷ்பாவை தேடி வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச்  செயலாளர் எஸ்.தயாநிதி விடுத்துள்ள அறிக்கையில், இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை குடும் பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.