அம்பத்தூர் வெங்கடாபுரம் ராமச்சந்திரன் தெருவில் உள்ள மின் கம்பம் முற்றிலுமாக சேதமடைந்து, உடைந்து விழும் நிலையில் உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.