சென்னை, செப். 7- சென்னை வில்லி வாக்கம் கிழக்கு சியாளம் சாலையில் சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த சாலை வழியாக ஏன்சிஸ் எனப்படும் மழைநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வா யில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. குடிநீர் தொட்டிகள் அனைத்தும் கால்வாய் அருகிலேயே உள்ளன. இந்த கால்வாயை முன்பு ஐசிஎப் நிர்வாகம் பராமரித்து வந்தது. தற்போது சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்து விட்டதாக ஐசிஎப் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு ஐசிஎப் நிர்வா கம் இந்த கால்வாய் நீரை தூய்மை செய்வதாகக்கூறி கால்வாயின் நடுவில் தடுப்பு போட்டது. முறையாக அதில் வரும் குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தாததால் அவை அந்த தடுப்பில் தேங்கி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய் சுமார் 8 அடி ஆழம் கொண்டது. தரையோடு தரையாக கால்வாய் இருப்ப தால் குழந்தைகளும், சைக்கிளில் செல்வோரும், முதியோரும் அவ்வப்போது கால்வாயில் விழுந்து விடுகின்றனர். மேலும் அருகில் உள்ள நகரில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தில் உள்ள கழிவு நீரும் இந்த கால்வாயில் விடப்படு கின்றன. இரவு நேரங்களில் கழிவு நீர் லாரிகள் இந்த கால்வாயில் கழிவு நீரை விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் விசுவதோடு, கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கிணற்று நீரும் மாசடைகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வில்லி வாக்கம் பகுதிக் குழு சார்பில் அந்த பகுதி மக்களிடம் கையொழுத்து இயக்கம் நடத்தி அமைச்சர், சுகாதார இயக்குனர் என 13 துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து வில்லி வாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன், சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய பகுதி பொறியாளர் வைதேகி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் கால்வாயில் தேங்கியிருந்த நீரை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த கால்வயை நல்ல கால்வாயில் கொண்டு இணைப்பதற்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள தாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது சிபிஎம் பகுதிச் செயலா ளர் எம்.ஆர்.மதியழகன், இரா.மணிமேகலை, எம்.முரளி, எம்.ராஜி, ஜெ.ரவி. சுந்தரராஜன், கோபால கிருஷணன் உள்ளிட்ட பொதுநல சங்க நிர்வாகிகள் இருந்தனர்.