சென்னை, ஆக. 22 - சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டு பிடித்து தரக் கோரிய ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டு பிடித்து தரக் கோரி ஹென்றி திபேன் உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தி ருந்தார். கடந்த ஜூலை 6 ஆம் தேதி முகிலன் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அந்த வழக்கு வியாழனன்று (ஆக.22) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகிலன் கடந்த ஜூலை 6 அன்று திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். கரூரை சேர்ந்த பெண் அளித்திருந்த பாலியல் புகாரில் ஜூலை 7 அன்று கைது செய்யப்பட்டு, அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.