tamilnadu

அதானியை முதல்வர் சந்திக்கவில்லை; அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை

சென்னை,டிச.6- கவுதம் அதானியை முத லமைச்சர் சந்திக்கவும் இல்லை. அந்தத் தனியார் நிறுவனத்துடன்  ஒப்பந்தம் எதுவும் போடவும் இல்லை. இந்த நிலையில், அவ தூறு பரப்புவோர் மீது சட்டப் பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று   மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.  இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, தொழிலதிபர் கவுதம் அதானி லஞ்சம் கொடுத்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை சில  வாரங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது.  

அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தப் புகாரில் ஆந்திரா மற்றும் தமிழக அரசுகளின் பெயரும் பகிரங்கமாக அடிபட்டது. இதுதொடர்பாக ஆந்திராவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

அதேபோல், அதானி நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தொகைக்கு மின்சாரம் பெறுவதற்கு,  தமிழக மின்சார வாரிய அதிகாரி கள் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப் பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாகவும், அதுபற்றி விளக்கம்  அளிக்க வேண்டும் என்றும் எதிர்க் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதி லளித்துள்ளார். அவர் கூறுகையில்,  “தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதல்வர் சந்தித்தது போலவும்,  அதிக விலை கொடுத்து அதானி யிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போல வும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு வருகின்றன. இதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர், அதானியை சந்திக்க வும் இல்லை.

அதானி நிறுவனத்து டன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. அதிமுக ஆட்சியில் சீர் குலைந்து போன மின்சார வாரியத்தை ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகளால் தலைநிமிர வைத்துள்ளார் முதல்வர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி, அடிப்படை உண்மை இல்லாத பொய் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடல்ல. இதுபோன்ற பொய்த் தகவல்களை தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டப்பூர்வ நட வடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.