tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் மீதுதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது

நீலகிரியில் சாலை அமைப்பதில் ஏற்பட்ட ஊழலை அம்பலபடுத்தியதால் மார்க்சிஸ்ட் கட்சியின் மீதும், மூத்த  தலைவர் மீதும் தொடரபட்ட மானநஷ்ட வழக்கில் எவ்வித முகாந்திரம் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து இவ்வழக்கில் விடுவிக்கப்பட்ட மூத்த தலைவரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான என்.வாசுவிற்கு  நீலகிரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.