tamilnadu

திருப்பரங்குன்றம் தேர்தலை நிறுத்தக் கோரி வழக்கு

சென்னை, மே 14-பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தொடர்ந்துள் ளார். அந்த மனுவில், திருப்பரங்குன் றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவிலான பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் எனவே தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைக்க அல்லது தள்ளிவைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.