சென்னை, ஜூலை 6- இந்திய அரசியலமைப்புக்கும், ஜன நாயகத்திற்கும் எதிராக மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, ஜூலை 12 முதல் 14 வரை நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மோடி அரசு கடந்த ஆட்சிக் காலத்தின் போது நாடாளுமன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும், 140 கோடி பொதுமக்களுக்கும் விரோதமாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பார திய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது.
இச்சட்டங்களுக்கு எதிராக நாடு முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சி இயக்கங்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது வலுவான எதிர்ப்பினை தெரிவித்ததுடன் இதனை அமல்படுத்தக் கூடாது என்று வலி யுறுத்தி வருகின்றனர். ஆனால், ஜூலை 1 அன்று முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்த ளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மோடி அரசின் எதேச்சதி கார பாசிச பாணி நடவடிக்கைகளை கண் டித்தும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதி ராகவும், அரசியல் பழிவாங்கும் நோக் கத்திற்காகவும் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நடை முறைப்படுத்துவதை நிறுத்தி வைக்கவும், நாடாளுமன்றத்தில் இச்சட்டங்கள் குறித்து விரிவான ஜனநாயகப் பூர்வமான விவாதம் நடத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2024 ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் மாநக ரம், நகரம், பேரூர், சிற்றூர் என அனைத்து இடங்களிலும் கண்டன இயக்கங்கள் நடை பெற உள்ளன. இந்த இயக்கத்தில் மாநில, மாவட்ட, உள்ளூர் தலைவர்கள் பங்கேற் கின்றனர்.
மோடி அரசின் மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இப்போராட் டத்திற்கு ஜனநாயக இயக்கங்களும், வழக் குரைஞர்களும், பொதுமக்களும் பேராத ரவு அளித்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கி றது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.