சென்னை,செப்.17- தவறான நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடு போன்ற காரணங் களுக்காக பஞ்சாயத்து தலைவர்கள் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க முடியாது என்று கோவை ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம், சோமயம்பா ளையம், மலுமிச்சம்பட்டி, சிக்கரசம்பா ளையம் கிராம பஞ்சாயத்து தலை வர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, காசோ லைகளில் அவர்கள் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவுகளை எதிர்த்து, சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராமப் பஞ்சாயத்துகளில் பணிகள் நிறைவேற்றும் வகையில் காசோலைகளில் கையெழுத்திட தலை வர், துணைத் தலைவர் மறுக்கும் பட்சத் தில் திட்டப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, காசோலைகளில் கையெழுத் திடும் அதிகாரத்தை பறிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது.
அதேநேரம் தவறான நிர்வாகம், நிதி முறைகேடு போன்ற குற்றச்சாட்டு களுக்காக காசோலைகளில் கை யெழுத்திடும் பஞ்சாயத்து தலைவர் கள் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரி வை பிரயோகிக்க முடியாது. இந்த வழக்குகளில், கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் எந்தவொரு விளக்க மும் கோராமல் அவர்களின் காசோலை களில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு ள்ளார். எனவே அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தவறு செய்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு எதிராக புதிதாக நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. ஆனால் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க சட்டத்தில் உள்ள சூழல் அமைந்திருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி உத்தரவிட்டனர்.