மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகம் மீது சாதி வெறியர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து ஞாயிறன்று (ஜூலை 16) புரசைவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன் தலைமை வகித்தார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.வி.சீனிவாசலு, எஸ்.மிருதுளா, பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜி. ராஜாமணி, பி.கே.மூர்த்தி, ஜி. புகழேந்தி, ஏ.நாகராணி, ஏ.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.