சென்னை, ஜூன் 18- குழந்தைகள் ஆணையத் தலை வரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகள் மீதான வன் முறைக்கு எதிரான பிரச்சாரத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடங்கியுள்ளது. குழந் தைகள் பாதிக்கப்படும்போது, சமூ கம், குடும்பம், அரசு செய்ய வேண் டிய பணிகளை பட்டியலிட்டு ஜூன் 17 துவங்கி 22 வரை தமிழகம் முழு வதும் 41 மாவட்டங்களில் பிரச்சா ரம் மேற்கொள்கிறது.
இதன் ஒரு பகுதியாக செவ்வா யன்று (ஜூன் 18) தென்சென்னை மாவட்டம், ஆலந்தூர் பகுதி, நங்க நல்லூரில் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து மாதர் சங்கத்தின் மாநி லப் பொதுச்செயலாளர் அ. ராதிகா பேசியதன் சுருக்கம் வருமாறு:
குழந்தைகள் மீதான வன் முறை, பாலியல் பலாத்காரம் அதி கரித்து வருகிறது. போதைக் கலாச் சாரம் இதற்கு மிகப்பெரிய காரண மாக உள்ளது. குறிப்பாக, கல்வி நிலையங்களை சுற்றி அதிக அளவு போதைப் பொருட்கள் புழங்குவ தாக தொடர்ந்து செய்திகள் வருகி ன்றன. எனவே, போதைப் பொருட் கள் புழக்கத்தை அரசு தடுப்ப தோடு, விற்பனை செய்கிறவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, வழக்கை உரிய காலத்தில் முடிக்க அரசு அறிவுறுத்த வேண் டும். பாதிக்கப்படும் குழந்தை களுக்கும், அவர்களது குடும்பத்தி னருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் அரசின் நடவ டிக்கைகள் அமைய வேண்டும். அதற்கான அறிவுரைகள் காவல் துறைக்கு வழங்க வேண்டும்.
கரம் கோர்ப்போம் - தடுத்து நிறுத்துவோம்!
தமிழ்நாடு குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணையத்திற்கு 5 ஆண்டுகளாக தலைவர் இல்லை. குழந்தைகள் மீதான வன்முறை ஏரா ளமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆணையத்திற்கு தலை வர் இல்லாமல் இருப்பதும், ஆணை யம் செயல்படாமல் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
குழந்தைகளுக்கு ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு, குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்கும் பணி களை துரிதப்படுத்த வேண்டும். காவல்துறைக்கு அதற்குரிய உத்த ரவுகளை பிறப்பிக்க வேண்டும். குழந்தைகள் மீதான வன்முறை யை தடுக்க கரம் கோர்ப்போம், தட்டிக் கேட்போம், தடுத்து நிறுத்து வோம்.
இவ்வாறு அ.ராதிகா பேசினார்.
மாவட்டத் தலைவர் எஸ். சர வண செல்வி தலைமையில் நடை பெற்ற இந்த பிரச்சார இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் ம. சித்ர கலா, பொருளாளர் ஜூலியட், நிர்வா கிகள் எஸ். பிச்சையம்மாள், டி. விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நங்கநல் லூரை தொடர்ந்து பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடை பெற்றது.
உ.வாசுகி
கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தானம் நகர் பகுதியில், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி, வீடு வீடாக பெண்களிடம் துண்டறிக்கை கொடுத்து பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலை வர் எஸ். சாந்தகுமாரி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாவட்டச் செயலா ளர் பி. மாதவி, மாவட்டப் பொருளா ளர் எஸ். ரேவதி, துணைத் தலை வர் எம். ஜெயசித்ரா, துணைத் தலை வர் கே. அன்புச் செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.