tamilnadu

img

வக்பு சொத்துக்களை அபகரிப்பதே ஒன்றிய பாஜக அரசின் நோக்கம்!

வக்பு சொத்துக்களை அபகரிப்பதே ஒன்றிய பாஜக அரசின் நோக்கம்!  

வடசென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் சாடல்

சென்னை, ஏப். 18- வக்பு  சொத்துக்களை அபகரிக்கவே ஒன்றிய அரசு புதிய வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய  கட்டுப்பாட்டுக்குழு தலைவர்   ஜி.ராமகிருஷ்ணன் சாடினார்.  ஒன்றிய பாஜக அரசின் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சார்பில் வியாழனன்று (ஏப்.17) பெரம்பூர், எம்.கே.பி. நகர், திருவிக நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், ஒன்றிய அரசின் வக்பு வாரிய திருத்தச் சட்டம் இஸ்லா மியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல அரசியல் சாசனத்திற்கு, ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது. 1954ஆம் ஆண்டு முதன்முதலாக வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு பலமுறை அந்த சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால் அப்போதெல்லாம் அதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் மோடி தலைமையிலான அரசு வக்பு திருத்த சட்ட முன்வடிவை கொண்டு வந்த போது, எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் அது தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  சிபிஎம் கொடுத்த திருத்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சிகள் சார்பில் திருத்தங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு எதையும் ஏற்கவில்லை. உறுப்பினர்களின் எந்த ஆட்சேபனையும் ஏற்காமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில்  சிபிஎம் வழக்கு இதை எதிர்த்து சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு வியாழனன்று (ஏப். 17) விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்த புதிய சட்ட திருத்தத்தில் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லா தவர்கள் உறுப்பினராகலாம் என்று குறிப்பிடப்படுகிறதே, அப்படியென்றால் இந்து அறநிலையத் துறையில் பிற மதத்தினர் உறுப்பினராக முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அரசு வழக்கறிஞர் பதில் ஏதும் கூறாமல் மவுனமாக இருந்தார். வாய் மொழி மூலமாக ஒருவர் தனது சொத்தை வக்பு வாரியத்திற்கு அளித்திருந்தால் அது செல்லாது என்றும் பத்திரப் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மட்டுமே செல்லும் என புதிய மசோதா கூறுகிறது. பிரிட்டிஷார் இங்கு வந்து ஆட்சி செய்வதற்கு முன் பத்திரப்பதிவு அலு வலகம், வருவாய்த்துறை என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் வந்த பிறகுதான் இவையெல்லாம் கொண்டு வரப்பட்டன. ஆனால் வக்பு வாரியம் அதற்கு முன்பே கொண்டு வரப்பட்டது. அப்படியென்றால் அதற்கு முன்பு வழங்கப்பட்ட சொத்துக்கள் செல்லாது என்பது முஸ்லீம் மக்களின்  சொத்துக்களை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.  இடைக்கால உத்தரவு  பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது, ஒன்றிய அரசு 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தர விட்டு, அதுவரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களையும் செய்யக் கூடாது, அதேபோல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அல்லது  வக்பு என அறி விப்பு செய்யப்பட்ட சொத்துக்கள் மீது, மாவட்ட ஆட்சியர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு  கிடைத்த வெற்றி  நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மதச்சார்பற்ற நாட்டில் யார் யாருக்கு வேண்டுமானாலும் நிதி கொடுக்கலாம், உதவி செய்யலாம். அப்படி இருக்கும் போது, வக்பு வாரியத்திற்கு நிதி கொடுக்க 5 ஆண்டுகள் இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம். இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. தமிழ்நாட்டிலும், புதுவையிலும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் அறநிலையத் துறையை தனியாரிடம் கொடுத்து விடு என்று கேட்கிறது. இந்து அறநிலையத் துறை வேண்டாம் என்று கூறும் பாஜக வக்பு வாரிய சட்டத்தை ஏன் திருத்த வேண்டும். அதை தனியாருக்கு கொடுத்து விடு என்று ஏன் கூறவில்லை. அவர்களின் நோக்கம் வக்பு வாரிய சொத்துக்களை கொள்ளை அடிக்க வேண்டும் என்பதுதான். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசி னார். பெரம்பூரில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், கம்ரூதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்),  பி.பசீர், சிராஜிதீன் (மனிதநேய மக்கள் கட்சி), ஏ.ஆர்.ஆர்.நூர்முகமது (முஸ்லிம் மாண வர் பேரவை),  முனாவர் (ஐஎம்எம்கே), நித்தியராஜ், அ.நைனா முகமது, ஜாபருல்லா (சிபிஎம்) ஆகியோர் பேசினர். திருவிக நகரில் பகுதிச்செயலாளர் வி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்தீஷ்குமார், சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.குப்புசாமி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் எம்.பி.முகமது நாசர், முன்னாள் சிபிஎம் கவுன்சிலர் பா.தேவி, நிர்வாகிகள் எம்.அசோக்குமார், பி.மனோகரன் ஆகியோர் பேசினர்.