tamilnadu

உயரதிகாரி உத்தரவிட்டும் மதிக்காத நிர்வாகம்!

சென்னை, ஜூலை 12 - மாநகராட்சி உயர் அதிகாரி உத்தரவிட்டும், திடீர் நகர் பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க மறுப்பது ஏன்? என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி யுள்ளது. புரசைவாக்கம், பிரிக்லின் சாலை, திடீர்  நகரில் உள்ள பொது கழிப்பிடங்களை பராமரிப்ப தோடு, தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையில் அதிகரிக்க  வேண்டும், வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு தர வேண்டும்,

தமிழ்நாடு நகரப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பை விரைந்து கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 8ந் தேதி மார்க்சிஸ்ட்  கட்சி ‘திடீர் நகர் மக்களின்  வாழ்வாதார போராட்டத்தை நடத்தியது. அதனை தொடர்ந்து மாநகராட்சி துணை ஆணையர் ஆர்.லலிதாவை  சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தியது.  மனுவை பெற்றுக் கொண்ட  துணை ஆணையர், சென்னை குடிநீர் வழங் கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மாநகராட்சி 8வது மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி யாக பிரச்சனைகளை சரி செய்ய உத்தரவிட்டார்.

மேலும், அடுக்குமாடி வீடு  கட்ட நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். அதன்படி, திடீர் நகரில் எந்த அடிப்படை பணியும் நடைபெறவில்லை. குறைந்தபட்சமாக அதிகாரி கள் அந்த பகுதியை ஆய்வு கூட செய்யவில்லை. இந்நிலையில் வெள்ளி யன்று (ஜூலை 12) மாநக ராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணனை சந்தித்து, கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா முறையிட்டார். மேலும், சிபிஎம் அளித்த  மனு மீது உயரதிகாரி  பேச்சுவார்த்தை நடத்தி  உத்தரவிட்டு 4 நாட்களாகி யும் எந்தவிதமான நடவடிக் கையும் எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர்  கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்ததோடு, உடனடி யாக நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்துள்ளார். இந்நிகழ்வின்போது, எழும்பூர் பகுதிச் செயலா ளர் கே.முருகன், பகுதிக் குழு உறுப்பினர்கள் ஜி.ராஜாமணி, ஜி.புகழேந்தி,  கிளைச் செயலாளர் இ.பிர காஷ் மற்றும் பி.செல்வராஜ், எஸ்.தட்சிணா மூர்த்தி ஆகியோர் இருந்தனர்.