தமிழ்நாடு அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நன்றி!
சென்னை, பிப்.22- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் 15 ஆண்டுகால கோரிக்கை யான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித் துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளி யிட்டுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த. செல்ல கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமு வேல் ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில், 2008 இல் துணைத் திட்டங்களுக்கான சிறப்பு மாநாடுகள், 2009 இல் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி, 2010 இல் கோரிக்கை சாசனம் உருவாக்கப் பயிலரங்கம், 2011 இல் சென்னையில் சிறப்பு மாநாடு, 2023 இல் வரைவுச் சட்டம் உருவாக்கம் என தமிழக அரசின் சட்டம் உரு வாக்கப்படுவதற்கு பின்புலமாக இருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பங்க ளிப்புகளை குறிப்பிட்டு நினைவு கூர்ந்துள்ளனர். தமிழக அரசுக்கு நன்றி யும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு மீனவருக்கு 6 மாதம் சிறை!
இராமநாதபுரம், பிப்.22- பிப்ரவரி 4-ஆம் தேதி, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வ ரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அதில் 20 மீனவர்கள் நீதிமன்ற உத்தர வின்படி விடுதலை செய்யப்பட்டனர்.
அதேநேரம் 2 மீனவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கி இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராகவும், தமி ழக மீனவர்களை விடுதலை செய்ய நட வடிக்கை எடுக்குமாறும் ஒன்றிய அரசை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடு பட்டனர். மீனவர்களை விடுவிக்காவிட் டால் கச்சத்தீவு, புனித அந்தோணியார் ஆலய திருவிழா புறக்கணிப்புப் போராட் டத்திலும் ஈடுபடப் போவதாகவும் அவர் கள் அறிவித்தனர்.
பின்னர், ஆட்சியர் விஷ்ணு சந்திரன், அளித்த உறுதிமொழி யை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். இதையொட்டி, தற்போது 18 மீன வர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்ட அதேநேரத்தில், தமிழ் நாட்டைச் சேர்ந்த படகு ஓட்டுநர் ஜான்சன் என்பவருக்கு இலங்கையின் ஊர்க் காவற்றுறை நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது, மீனவர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு
ஆதார் பதிவு
சென்னை, பிப்.22- பள்ளி மாணவர்களுக்கான ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை பிப்ரவரி 23 முதல் அந்தந்த பள்ளிகளி லேயே மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் கடி தம் எழுதியுள்ளார். “பள்ளி வளாகத்தில் ஆதார் பதிவு மற் றும் ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப் பிப்பை ELCOT-இன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தொடங்க உத்தேசிக் கப்பட்டுள்ளது.
இதனால் நிரந்தர சேர்க்கை மையத் திற்குப் பயணிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பிப்ரவரி 23 அன்று கோயம்புத்தூ ரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக் கிறார். அதே நாளில் அனைத்து மாவட் டங்களிலும் இந்த திட்டத்தை துவங்கி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற் காக மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிக்கு ஏற்கெனவே தகுந்த அறிவுரை கள் வழங்கப்பட்டுள்ளன.
நேரடி பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer - DBT) முறையில் அர சாங்கத்தால் வழங்கப்படும் அனைத்துச் சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறு வதற்கு, பள்ளிக் குழந்தைகளுக்குப் ஆதார் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இந்தத் திட்டத்தை மிகவும் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.” இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகுரு பரன் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகளுக்கு புரியும் எழுத்தில் மருந்துச் சீட்டு
மருத்துவர்களுக்கு அரசு உத்தரவு
சென்னை, பிப்.22- நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டு களை எழுதி தரும்போது ஆங்கில பெரிய (CAPITAL) எழுத்துகளில் எழு தித்தர வேண்டும் என தமிழக சுகாதா ரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் எனவும், தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் இதன்படியே இனி மருந்துச்சீட்டில் எழுத வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது நோயாளிகளுக்கு புரி யாத வகையில் மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுப்பது குழப்பங் களை ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.