வாய்ப்பாட்டு,வாத்தியங்களில் திறமையான இளம் கலைஞர்களுக்கு தளிர்கலா விருதுகள்
சென்னை, ஏப். 20- சென்னையில் வாய்ப்பாட்டு, தந்தி வாத்யம் மற்றும் காற்று வாத்தியம் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பாக வாசித்த இளம் கலைஞர்களுக்கு தளிர் கலா விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை தி.நகர் வாணி மகால் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழச்சியில் 12வயது முதல் 18வயதுகுட்பட்ட இளம் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வாய்ப்பாட்டு, வாத்திய கருவிகளை வாசிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. வயலின் வித்வான் இசைமா மணி உஷா ராஜகோபாலன், இசைக்கலை ஞரும் ஆசிரியருமான சியமளா வெங்க டேஷ்வரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை பரிசுத்தொகையாக ரூ.2500 வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை கர்நாடிக் ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கர்நாடக இசை யில் ஆர்வம் கொண்டுள்ள இளம் கலை ஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டதாக ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.