tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாளை மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாளை மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். தொழிற்சங்கத்தை தமிழ்நாடு அரசு பதிவு செய்து தராமல், வேலைநிறுத்தத்தை திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

எனவே, தொழிலாளர் நலத்துறை உடனடியாகச் பதிவுச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் புதனன்று (அக்.9) மாலை மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் ச.மயில் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கமும் கலந்து கொள்வதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் தெரிவித்துள்ளார்.