tamilnadu

img

ஒன்றிய அரசைக் கண்டித்து ஆசிரியர்கள் - அமைச்சுப் பணியாளர்கள் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 165 கோடி ரூபாயை வழங்குவோம் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து புதனன்று (அக்.9) சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க தலைவர் கு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மேடையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஆசிரியர் சங்கத்தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் உள்ளனர்.