சென்னை, ஜூன் 8- தமிழகம் முழுவதும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதல்நாளான சனிக் கிழமை நடைபெற்ற தேர்வை 1 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத் தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகு தித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி கல்வியியல் படிப்பு முடித்த பட்டதாரிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்க, டெட் தேர்வின் முதல் தாளிலும் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த இரண்டாம் தாள் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் டெட் முதல் தாள் தேர்வு சனிக்கிழமை நடை பெற்றது. 2ஆம் தாள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நடைபெறுகிறது. முதல் தாள் தேர்வெழுத 1 லட்சத்து 83 ஆயி ரத்து 341 பேரும், இரண்டாம் தாள் தேர்வெழுத 4 லட்சத்து 20 ஆயி ரத்து 815 பேரும் விண்ணப்பித் துள்ளனர். தமிழகம் முழுவதும் முதல் தாளுக்கு, 471 மையங்க ளும் இரண்டாம் தாளுக்கு 1,081 மையங்களும் அமைக்கப் பட்டுள்ளன. சென்னை முதல் தாளுக்கு 28 மையங்களும், இரண் டாம் தாளுக்கு 60 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் பிற் பகல் 1 மணிவரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் நிலையில் ஒரு மணி நேரம் முன்னதாக காலை 9 மணிக்கே தேர்வறைக்குள், தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட னர். தேர்வறைக்குள் ஹால் டிக்கெட், பேனா தவிர, கைப்பேசி உள்ளிட்ட மின்னணுப் பொருட் கள் எதுவும் அனுமதிக்கப்பட வில்லை முறைகேடுகளைத் தடுக்க 2000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.