tamilnadu

img

எழுத்தாளர் இளவேனில் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி....

சென்னை:
எழுத்தாளர் இளவேனில் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர் கள் சங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத் தின் மாநிலத் தலைவர் ( பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

கவிஞர், விமர்சகர், எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்ட தோழர்இளவேனில் முற்போக்கு இலக்கிய இயக் கத்தின் முன்னத்தி ஏர்களில் ஒருவர். அவர்நடத்திய ‘கார்க்கி’ சிற்றிதழ், முற்போக்குஇலக்கிய இயக்கத்தின் கொடிக்கப்பலாகவே திகழ்ந்தது.

தொழிலாளர் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் வி.பி.சிந்தன் அவர்களின் அடியொற்றி இடதுசாரி இயக்கத்திற்குள் வந்தவர். தமுஎகசவின் முன்னோடி இயக்கமான ‘மக்கள் எழுத்தாளர் சங்கத்தில்’ தோழர் ச.செந்தில் நாதனோடு இணைந்து களமாடியவர். மக் கள் எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில், அதைத்தொடர்ந்து எழுதப்பட்ட பல கட்டுரைகளில்  எழுத்தாளர் ஜெயகாந்தன் மீதாக அவர் முன்வைத்த கூரிய விமர்சனங்கள் முற் போக்கு இலக்கியத் திறனாய்வின் பிரிக்கமுடியாத ஒரு முக்கியமான பகுதியாகும். ஆழமான தர்க்கமும், மூர்க்கமான முன்வைப்புகளும்,  உணர்வாவேசமும், வசீகரமும் கொண்ட எழுத்துநடை அவருடையது. 1960,70-களில் ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தை தனது எழுத்தின் வாயிலாக இடதுசாரி சிந்தனைக்குத் திருப்பியவர் அவர்.

கவிஞர் இன்குலாப்பின் முதல் கவிதைத் தொகுப்பிற்காக அவர் எழுதிய முன்னுரையான “மகரந்தங்களிலிருந்தும் துப்பாக்கி ரவைகள்” முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் போர்ப்பிரகடனமாகவே அன்றைக்கு வரித்துக்கொள்ளப்பட்டது.மிகச்சிறந்த ஓவியர் அவர்; அவரது ஒயிலான எழுத்துருக்களும் ஓவியங்களும் பலரது நூல்களுக்கு முகப்பாய் விளங்கின. மாமன்னன் அசோகரது கலிங்கப்போரின் வரலாற்றுப்பின்னணியில்  அண்மையில் அவர் எழுதிய “காருவகி” நாவல், தமிழின் வரலாற்றுப் புதினங்களின் வரிசையில்ஒரு முக்கியமான வரவு.

எழுத்து என்பதைத்தவிர வேறு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாதவர். தனது வாழ்வில் பல இன்னலான நாட்களை கடந்துவந்தவர். தொடர்ந்து முற்போக்கு இயக்கத்தோடு தனது தொடர்புகளை அவர் கொண்டிருக்காவிடினும் தமது கலை  இலக்கியக் குறிக்கோள்களில்  என்றுமே பிறழ்ந்திராத தோழர் இளவேனில் இன்றைக்கு இல்லாது போயிருக்கிறார். புத்தாண்டு தோழர் இளவேனிலின் மரணச்செய்தியோடு தொடங்கியுள்ளது. அவருக்கு நமது அஞ்சலிகள்.  அவரது பிரிவால் வாடும் அவருடைய குடும்பஉறுப்பினர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவரது துயரிலும் தமுஎகச பங்கேற்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்

;