சென்னை, செப். 26 - பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடு விப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூத ரக உதவிகளை வழங்கிடு மாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், “திருநெல் வேலி மாவட்டம், இடிந்த கரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டி ற்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த 11-9-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக, மீனவர்களது வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கைது செய்யப் பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவி கள் மற்றும் தூதரக உதவி களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள் ளார்.