tamilnadu

img

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் இணையவழியில் ரூ.1,100 கோடி திருட்டு மாநில அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை, டிச.6- தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்க ளில் இணைய வழி மோசடி களால் ரூ.1,100 கோடி திருடப்பட்டுள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரி வித்துள்ளார்.

கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கம் (அவார்) சார்பில் 27-ம் ஆண்டு சர்வதேச இணைய பாதுகாப்பு உச்சி மாநாடு சென்னையில் வியாழன், வெள்ளி நடை பெற்றது. 

இந்த மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்து தமிழக அரசின் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி  வேல் தியாகராஜன் பேசுகை யில்,இணைய பாது காப்பு என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நம்பிக்கையின் தூணாகும். தகவல் திருட்டு தொடர்பாக ஐபிஎம் நிறுவனம் 2024-ல் வெளியிட்ட அறிக்கை யின்படி, உலகளவில் நடை பெற்ற தகவல் திருட்டு களின் மூலம் ரூ.42.36 கோடி வரை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரி வித்துள்ளது. இது கடந்த ஆண்டை விடை 10 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 7.9 கோடி சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. உலகள வில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. டிஜிட்டல் மாற்றத்துக்கான பயணத்தை நோக்கிய நம் பயணத்தில், நம் நாடு சராசரியாக ரூ.19.48 கோடி இழப்பை தகவல் திருட்டின் மூலம் சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் 2024 ஜன வரி முதல் செப்டம்பர் வரை, இணையவழி நிதி மோசடி குற்றங்களின் மூலம் ரூ.1,100 கோடிக்கு மேல் பணம் பறிப்பு நடந்துள்ளது. இந்த இழப்பு கள் இணைய பாதுகாப்பை நாம் மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஒரு மாநிலமாக தமிழகம் டிஜிட்டல் பாதுகாப்புக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயந்த் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் இந்திய சைபர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர், லெப்டினென்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த், கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ. கேசவர்த்தன், கேஸ்ப ர்ஸ்கை நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்கு நர் இகோர் குஸ்நெட்சோவ்,  வெரிஜான் தொலைத்  தொடர்பு நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மாணிக்கம் கண்ணையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.