தில்லி, டிச. 4- மிக்ஜம் புயலால் தமிழ கத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிற நிலையில், அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து, புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை குழு தலை வரும் கோவை நாடாளுமன்ற உறுப்பினரு மான பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்பு தீர்மா னத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகிய மிக்ஜம் புயல் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தென் கிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 48 ஆண்டுகள் இல்லாத அளவில் அதீத காற்று டன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதனையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவை குழு தலை வரும் கோவை நாடாளுமன்ற உறுப் பினருமான பி.ஆர். நடராஜன் நாடாளு மன்றத்துக்குள் நடைபெறும் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து, புயலால் பாதிப்புக்குள்ளானது குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் குழு செயலாளரிடம் ஒத்தி வைப்பு தீர்மானத்தை கொடுத்துள்ளார்.