tamilnadu

அமலாக்கத்துறையை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு

சென்னை,நவ.27- தமிழ்நாட்டில் மணல் குவாரிக ளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக அளவு மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாகவும், மணல் குவாரி ஒப்பந்தத்தில் வந்த வருமானம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

மேலும் விசாரணைக்காக ஆஜரா கும்படி திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரி யலூர், வேலூர் மாவட்ட ஆட்சி யர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்  அனுப்பியிருந்தது.

இச்சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கு தடை  விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தனர். 

இவ்வழக்கு திங்களன்று (நவ.27) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. அப்போது தமிழ் நாடு அரசு சார்பில் வாதிட்டபோது, கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது.

சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதி காரத்திற்கு உட்பட்டது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது.

பாஜக ஆளும் மாநிலங்களில் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. அம லாக்கத்துறை ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு விதமாக செயல்படு கிறது. மணல் கொள்ளை பற்றி விசா ரிக்க அமலாக்க துறைக்கு அதிகார மில்லை.

மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங் களை கேட்டுப்பெறலாம். விசார ணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்தார்.  பிறகு அமலாக்க துறை சார்பில் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதற்கும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. 

அனைத்து குவாரிகளின் விவ ரங்களை எப்படி கேட்க முடியும். என கேள்வி எழுப்பினர். இதையடுத்து இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை (நவ.28) தீர்ப்பு வழங்குவதாக நீதி பதிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் தீர்ப்பு வழங்குகின்றனர்.