tamilnadu

img

மீனவர்களை மதிக்காத ஒன்றிய அரசு!

“மீனவப் பிரதிநிதிகள் எல்லாம் இங்கே இராமேசுவரத்தில் இருக்கும் போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக மீனவப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்ததாக நாடகம் ஆடுகிறார். அண்ணாமலை ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த சில மணி நேரங்களிலேயே 22 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மீனவர்கள் என்றால் ஒன்றிய அரசு உடனே துடிதுடித்து போர்க்குரல் எழுப்புகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் என்றால் கேட்பதற்கு நாதியில்லை. தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே ஒன்றிய அரசு மதிப்பதில்லை!” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.