tamilnadu

img

தமிழ்படைப்பாளர்கள் சங்கத்தின் அறு பெரும் விழா

சங்கராபுரம், நவ.11- சங்கராபுரம் தமிழ்படைப்  பாளர்கள் சங்கத்தின் சார்பில்  தமிழறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை, ஆட்சிமொழிக் காவலர் கீ.ராமலிங்கனார், தமிழறிஞர்  சி.இலக்குவ னார், பிரெஞ்ச் புரட்சியாளர்  வால்டேர், பொதுவுடைமை யாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாளை அறு பெரும் விழா வாக நடைபெற்றது. விழாவிற்கு மூவேந்தர் முத்தமிழ் இலக்கியப் பேரை வைத் தலைவர் தி.சுப்பிர மணியன் தலைமை வகித்  தார். மருந்தாளுநர் மு.பழனி யாப்பிள்ளை, சமூக ஆர்வ லர் நா.ராமசாமி, பாவலர் பி.கோவிந்தன், ஆசிரியர் த.கோமதுரை, மருத்துவர் க.ஆரிபுல்லா, அரசம்பட்டு அ.அரிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.இஸ்மாயில் குறள்  விளக்கமளித்தார்.திருக்  கோவலூர் தமிழ்ச் சங்கத்  தலைவர் கவிஞர் சிங்கார உதியன் வரவேற்றார்.

தலை மையாசிரியர் நா.கமல நாதன் தொடக்கவுரை யாற்றினார். மனித வாழ்க்கைக்கு நெகிழி அவசியமானதா? ஆபத்தானதா? என்ற தலைப்பில் மாணவர்களின் பட்டிமன்றம் நடைபெற்றது. ம.முக்தாஸ்ரீ நடுவராகவும், அவசியமானதே என்ற அணியில் ம.ஏஞ்சலின், அ. துர்காதேவியும், ஆபத்தா னதே என்ற அணியில் வை. கவிராஜ், ச.சாமிநாதனும் பேசினர். சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க.செம்பியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வள்ளலார் மன்றச் செய லாளர் இரா.நாராயணன் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார். தமிழுக்குத் தொண்டு செய்த கா.சு.பிள்ளை என்ற தலைப்பில் ஆசிரியர் கோ.எடிசன்,ஆட்சி மொழிக்காவலர் கீ.இராம லிங்கனார், என்ற தலைப்பில்  கவிஞர் இரா.துரைமுருகன், செந்தமிழ்க் காவலர் சி. இலக்குவனார் என்ற தலைப்  பில் கவிஞர் தேவதிருவ ருள், பிரெஞ்சுப் புரட்சியா ளர் வால்டேர் என்ற தலைப்  பில் ஆசிரியர் சி.முருகன், பொதுவுடமை ஆசான் பிர டெரிக் ஏங்கல்ஸ், சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த கலைவாணர் என்ற தலைப் பில் கவிஞர் கலிய செல்ல முத்து ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ஓவியஇமயம் மு. கலைச்செழியன், பணி நிறைவு பெற்ற ஆசிரியை இரா.சவுரியம்மாள்,உதவித் தலைமையாசிரியர் கோ. செல்வராசு, அரிமா வ.விஜய குமார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். சங்க துணைத் தலைவர் சி.இளை யாப்பிள்ளை நன்றி கூறி னார்.