சென்னை, ஆக. 31 - தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவி இதுவரை பதவி உயர்வு மூலமாக மட்டுமே நிரப்பப் பட்டு வந்தது. இந்நிலையில், முதல் முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி நியமன முறையிலும் உதவி இயக்குநர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவியில் 13 காலியிடங்களை நேரடி நியமன முறை யில் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்குரிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று (ஆக.31) வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொ துப்பிரிவினருக்கு 34 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி- முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 3 பகுதிகளைக் கொண்ட இந்த தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வு நவம்பர் 18-ஆம் தேதி நடை
பெறுகிறது. தமிழ்மொழி தாள் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி கள் தேர்வில் (நேர்முகத்தேர்வு உள்ள வை) தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் தேர்வு மட்டுமின்றி அரசு கலைக் கல்லூரி நூலகர், அரசு சட்டக்கல்லூரி நூலகர், கால்நடை மருத்துவர், கணக்கு அலுவலர், உதவி மேலாளர் உள்பட 26 வகையான பணிகளுக்கான தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
இத்தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 28-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆன்லை னில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையம், வெவ்வேறு தேர்வுகளுக்கான பதவிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம் என டிஎன்பி எஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநராக பணியில் சேருவோர் துணை இயக்குநர், இயக்குநர் என அடுத் தடுத்து பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.