சிதம்பரம், நவ.17- சிதம்பரம் ரயில் நிலையத்தில் குற்ற நட வடிக்கைகளை தடுக்கும் விதமாக ரூ. 1 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு ள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமா கும். சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம். அண்ணாமலை பல்கலைகழகம் உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிதம்பரம் நகருக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் ரயில்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடை பெற்று வருவதாக பயணி கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு முன்பு சிதம்பரம் ஆய்வாளர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பவ ங்களை தடுக்கும் விதமாக, ரயில் நிலைய மேலுளர் கனகராஜூடன் இணைந்து பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ. 1 லட்சம் மதிப்பில் 18 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி யுள்ளனர்.