tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் குட்டு  முதலமைச்சருக்கு  பேரவைத் தலைவர் பாராட்டு

சென்னை,ஏப்.8- உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று  தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய பேரவைத் தலைவர் மு.அப்பாவு,“வரலாற்று சிறப்புமிக்க இந்த மாமன்றம், பல சாதனைகளைப் படைத்தது அனைவரும் அறிந்தது. ஒரு ஆளுநர், ஒரு அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை மட்டும் தான் சட்டமன்றப் பேரவையில் வாசிக்கின்ற உரிமை உண்டு என்பதை இந்த சட்டமன்றத்தில் தான், நமது முதல்வர் தான் இந்தியாவிற்கே வழிகாட்டினார். அதேபோல்தான், இப்போதும், ஒரு சட்டம், சட்டமன்றப்  பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறை வேற்றி, அதன் அனுமதிக்காக ஆளுநருக்குச் சென்று, அவர் திருப்பி அனுப்பினால், மீண்டும் அதை நிறைவேற்றிக் கொடு த்தால், அதை ஆளுநர் தடையின்றி உடனடியாக நிறை வேற்றிக் கொடுக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்றத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளார் நமது முதலமைச்சர். நாகப்பட்டினத்தில் இயங்கி வருகின்ற மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதாவின் பெயரை வைக்க வேண்டும் என்று அதிமுக ஆட்சிக் காலத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு  அனுப்பப்பட்டு கிடப்பில் கிடந்தது. அந்தப் பல்கலைக் கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்று மீண்டும் இரண்டாவது முறையாக தீர்மானத்தை நிறை வேற்றி அனுப்பியது இன்றைய முதல்வர்தான். அதற்கு கூட நன்றி சொல்வதற்கு தயக்கம் காட்டுவது தான் வேதனையான விஷயமாக இருக்கிறது. ஆனாலும், தமிழகத் தின் பெருமையைத் தொடர்ந்து பாதுகாத்து வரும் முதல்வருக்கு பேரவையில் உள்ள அனைத்து உறுப்பி னர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளது: தமிழ்நாடு அரசு  

சென்னை, ஏப்.8-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான ஆட்சியில் தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு கள் குவிந்துள்ளன என தமிழ்நாடு அரசு தெரி வித்துள்ளது. 2024-25ல் தமிழ்நாடு 9.69% வளர்ச்சி வீதத்து டன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப்  புதல்வன் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. மகளிர் உரிமைத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங் களால் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

அனைத்துக் கட்சி கூட்டம்:  அதிமுக புறக்கணிப்பு  

சென்னை, ஏப்.8- நீட் தேர்வு தொடர்பாக வரும் 9-ம் தேதி சட்ட மன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். தமிழக அரசு கூட்டும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்படும் அனைத்துக் கட்சி  கூட்டத்தால் எந்த தீர்வும் ஏற்பட போவதில்லை எனவும் இது ஒரு நாடகம் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.