tamilnadu

img

சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11 30 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06055) நாளை மதியம் 12 30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்னை ஆவடி வரும் ஏ சி அதிவிரைவு சிறப்பு ரயில் (06056) நாளை மறுநாள் காலை 5.10 மணிக்கு ஆவடி வந்தடையும் இந்த ரயில் சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் போது ஆவடி செல்லாது. நாகர்கோவிலில் இருந்து வரும் போது ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். சென்டிரல் ரயில் நிலையம் செல்லாது..

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் 21ஆம் தேதி மாலை 3. 45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் ஏ சி எக்ஸ்பிரஸ் ரயில் (06043) நாளை காலை 8 30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் 22ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏ சி எக்ஸ்பிரஸ் ரயில் (06044) நாளை மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்டிரல் வந்தடையும். கொச்சுவேலியிலிருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் கூடுதலாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது