சென்னை, ஆக. 16- புவி கண்காணிப்புக்கான அதி நவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற் கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) காலை சரியாக 9.17 மணிக்கு திட்டமிட்டபடி ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதற்கான 6 மணி நேர கவுண்ட் டவுன் வெள்ளியன்று அதிகாலை 3 மணியளவில் தொடங்கிய நிலை யில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும், இஓஎஸ்-08 செயற்கைக் கோள் வெற்றிகரமாக புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்டது. புவி கண்காணிப்பு செயல்பாடு களுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் (இஸ்ரோ) வடிவமைத்துள் ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது.
இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலொடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சேட்டி லைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோ மெட்ரி பாலொடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் (SiC UVDosi meter) ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச் சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவி செய்யும். இதேபோல், ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர் நிலை களை கண்டறிதல் போன்ற பணி களுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டர் விண்ணில் யுவி கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். இது மனி தர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்தில் இடம்பெற உள்ளது.
குலசேகரன்பட்டினத்தில் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவுதளம்
இஸ்ரோ வடிவமைத்துள்ள இஎஸ்ஓ 08 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இன்றைய வெற்றி மூலம் எஸ்எஸ்எல்வி வளர்ச்சி நிறைவு பெற்றது என அறிவிக்கலாம்” என்றார். கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ள நிலையில், “இந்தப் பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும்” என்றும் குறிப்பிட்டார்.