திருவள்ளூர், ஆக.27- வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்களால் அதிகாரிகள் தற்போது கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ளியூர், விளாப்பாக்கம், வெங்கல், வடமதுரை, வேளாக்கா புரம், மாம்பாக்கம் உள்ளிட்டு 80 கிராமங்களில் வேட்டைக்காரன் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் தங்களை பழங்குடியினர் இனப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனால் அரசு எவ்வித முயற்சியும் எடுக்காமல் காலத்தை கடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் தமிழக முதல மைச்சர், துறையின் செயலாளர்கள் ஆகியோரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செயலாளர் இ.கங்காதுரை, மாநிலத் தலைவர் எம்.சேட்டு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆய்வு நடந்தி, அறிக்கையை மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர். இந்நிலையில், வேட்டைக்காரன் இன மக்கள் குடியிருக்கும் வில்லி வாக்கம் ஒன்றியம், மிட்டணமல்லி கிராமத்தில் புதனன்று (ஆக.22) அதிகாரிகள் ஆய்வு நடத்தி னர். பின்னர் ஞாயிறன்று (ஆக.25) பூந்தமல்லி அருகில் உள்ள சித்தர்காடு, சேக்காடு, விலிஞ்சம்பா க்கம், குப்பத்துமேடு ஆகிய கிராமங்களிலும் பழங்குடியினர் இன ஆராய்ச்சி மைய இயக்குனர் அலுவல கத்திலிருந்து வந்திருந்த அதிகாரி டாக்டர். உதயகுமார் விரிவாக ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் போது, அதிகாரி உதய குமாரிடம் தமிழ்நாடு வேட்டைக்கா ரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகி கள் இ.கங்காதுரை, ரமேஷ், சிகாமணி, சுரேஷ், கண்ணாயிரம், ஏழுமலை ஆகியோர் தங்களிட மிருந்த சில ஆவணங்களை அவரிடம் வழங்கினர். இந்த ஆய்வு குறித்து அவர் கூறுகையில், ‘காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் என தமிழகம் முழுவதும் ஆய்வு முடிந்த பிறகு, இதன் அறிக்கை மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும்’ என்றார்.