குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்தும், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் செவ்வாயன்று (டிச. 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக பிற கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்களை கடற்கரை அருகிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.