சென்னை, ஜூன் 5- தமுஎகச வடசென்னை மாவட்ட மாண வர்கள் கிளை சார்பில் மாணவர்களின் திறன் மேம்பாட்டு விழா பெரம்பூரில் நடை பெற்றது .
கிளைச் செயலாளர் சுகந்திரன் தேவன் தலைமையில் சிறார் எழுத்தாளர், ஊடகவியலாளர் ஆதி வள்ளியப்பன், மோ.கணேசன், ஞா.கலையரசி ஆகியோர் மாணவர்களின் கதை சொல்லுதல், கவிதை வாசித்தல், விழிப்புணர்வு பாடல், நாட்டுப்புற நடனம், களிமண் பொம்மை, ஓவியங்களை காட்சிப்படுத்தல், அபாகஸ் , கண்ணை கட்டிக்கொண்டு கியூபெக் வண்ணங்களை சேர்த்தல், “சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” கும்மி பாடல் நடனம் உள்ளிட்ட மாணவர்களின் தனி திறமைகளை பாராட்டி ஊக்கப்படுத்தி பேசினர்.
கிளை சார்பில் மாநில சங்க மைய நிதியாக ரூ. 5ஆயிரத்தை தமுஎகச வடசென்னை மாவட்டச் செயலாளர் மணி நாத்திடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்க ளுக்கும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இதில் எழுத்தாளர்கள் பிரியசகி, அமீபா, பொருளாளர் ஆரோக்கியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.