சென்னை, ஆக.11 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலனின் வீட்டில் எரிக்கப்பட்ட மாணவியின் எலும்புகள், தலைமுடி உள்ளிட்ட தடயங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டி யைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் தேநீர் கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் தமிழரசிக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் முத்தரசி (19) தாரபுரம் அருகே ஆத்துக்கால்புதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். கொளத்துப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தபோது முத்தரசியும், ஆத்துக்கால்புதூர் புதுத்தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் பரத் (29) என்பவரும் காதலித்து வந்தனர். இது குறித்து முத்தரசியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்த தால் அவரைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேத்தம்பட்டிக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்ற னர். இதன் பிறகு முத்தரசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சரக்கு வாகன ஓட்டுநரான பரத் வேலைநிமித்தமாக ஒட்டன்சத்தி ரம் செல்லும்போது முத்தரசியைச் சந்தித்துப் பேசி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் தமிழரசி கடந்த மே மாதம் தனது சகோதரி முத்தரசியை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டபோது இணைப்புக் கிடைக்கவில்லை. அந்த செல்லிடப்பேசி அனைத்து வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இதையடுத்து தனது தங்கையைக் காண கேத்தம்பட்டிக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். பின்னர் இது குறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் தமிழரசி தனது தங்கை முத்தரசியை காண வில்லை என புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரது செல்லிடப்பேசி எண்ணை வைத்து விசாரித்தனர். அவருடைய காதலன் பரத்தின் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், பரத் தனது பெற்றோர் விருப்பத்தின்படி, தாரா புரம் அருகே உள்ள வீராட்சி மங்கலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கடந்த மே மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இத்தகவல் முத்தரசிக்குத் தெரியவந்தது. இதையடுத்து முத்தரசி ஆத்துக்கால்புதூருக்குச் சென்று பரத்தை சந்தித்துள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பரத் நல்லதங்காள் தடுப்பணைக்கு அழைத்துச் சென்று முத்தரசியைக் கொலை செய்து, சடலத்தை வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் புதைத்துள்ளார். சில நாள்களுக்குப் பிறகு சடலத்தைத் தோண்டி எடுத்து அப்பகுதியில்வைத்து எரித்து விட்டதாகத் தெரியவந்தது. போலீஸார், பரத் கொடுத்த தகவலின்பேரில், அவரது தாயார் லட்சுமி, பரத்தின் குடும்ப நண்பர் குமார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி வேடசந்தூர் காவல் துறையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் தடயவியல் மருத்துவக் குழுவினர் ஆகியோர் முத்துலட்சு மியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்தனர். ஆனால் எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தலைமறைவான பரத்தின் தந்தை கனகராஜ், உறவினர் சுப்பிரமணி ஆகியோர் திருப்பூர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னர் சரண் அடைந்தனர். சரணடைந்த இருவரை யும் காவலில் எடுத்த வேடசந்தூர் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் ஆத்துக்கால்புதூ ருக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, பரத் வீட்டின் பின்புறத்தில் குளியல் அறை அருகே மறைவாக இருந்த இடத்தில் முத்தரசியை எரித்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து, சிறிய தலை முடி, எலும்புகள், முத்தரசியின் மடிக்கணினி பாகங்கள் ஆகிய வற்றை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.