சென்னை, மார்ச் 22 - தோல்வி பயத்தில் உள்ள பாஜக தனுக்குத் தானே சவக்குழியை வெட்டிக் கொள்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக சாடி யுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிரு ஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. ஆறு முகநயினார் ஆகியோர் வெள்ளியன்று (மார்ச் 22) சென்னையில் சந்தித்துப் பேசினர். அப்போது ‘ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ எனும் நூலை வழங்கினர்.
இந்த சந்திப்புக்கு பின், செய்தியாளர் களிடம் கே. பாலகிருஷ்ணன் கூறிய தாவது:
ஜனநாயகம் குறித்து கமல்ஹாசன் கவலை
ஜனநாயகத்தை பாதுகாக்க நடை பெறும் மாபெரும் தேர்தல் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மநீம தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து வாழ்த்து தெரி வித்தோம். அப்போது, பாஜக ஆட்சியில் ஜனநாயகம் மிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்த கவலைகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுகுறித்து பேசிய கமல்ஹாசன், அறிவிக்கப் படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது போல் தோன்றுகிறது. இந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.
தலைவர்கள் பிரச்சாரம்
ஆகவே தான், திமுக தலைமையிலான அணியை, இந்தியா கூட்டணியை ஆதரிப்பது எனது கடமை என்பதால் இணைந்து பணியாற்றுகிறேன் என்றும், விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி 40 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்றும் கூறினார்.
இந்தியா கூட்டணியை நாடு முழுவதும் வலுவான தலைவர்கள் பலர் ஆத ரிக்கின்றனர். தமிழ்நாட்டில் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளார். இவற்றால் ‘இந்தியா’ கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
தோல்வி அச்சத்தால் பாஜக பதற்றம்
தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நள்ளிரவில் அவசர அவசர மாக கைது செய்துள்ளனர். படுதோல்வி அடைவோம் என்ற அச்சத்தின் காரண மாக பாஜக, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைக் கூட உணராமல் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறது.
சோதனை நடத்துவது, கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறது. பாஜக தனக்குத் தானே சவக்குழியை வெட்டிக்கொள்கிறது. இத்தகைய நடவடிக்கையால் மக்கள் பாதிப்படைவார்கள். அந்த கோபம் மோடிக்கு எதிராக மாறி, பெரும் தோல்வியை அளிப்பார்கள்.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
மேலும், செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், “பிரதமர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங் களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படு வது குறித்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. கோவையில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் கூட்டம் வராததால் விதியை மீறி பள்ளி மாணவர்களை சீருடை யுடன் கொண்டு சென்று பங்கேற்க வைத்துள்ளனர். மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகிறார்” என்றார்.
அகில இந்திய தலைவர்கள் பிரச்சாரம்
“ஏப்ரல் 6-8 தேதிகளில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், ஏப். 11-13 தேதிகளில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகி யோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பிரச்சாரம் செய்வார்” என்றும் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.