சென்னை, மே 9- எர்ணாவூர் மின் வாரிய குடியிருப் பில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் எண்ணூர் அனல் மின் நிலையம் குடியிருப்பு 3இல் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த வழியாகத்தான் பொதுமக்கள் கத்திவாக்கம் ரயில்வே ஸ்டேஷன், இந்தியன் வங்கி, தபால் நிலையங்க ளுக்கு செல்ல வேண்டும். குடியிருப்பு களுக்குள் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனால் பெண்கள், குழந்தைகள், நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுவதால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.
அதேபோல் ராமநாதபுரம் 2ஆவது தெரு, 3ஆவது தெரு மற்றும் பிருந்தாவன் நகரிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சியில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் ஒரு சிறுவனை நாய் கடித்துள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.