மணலியொட்டியுள்ள பெரியசேக்காடு பகுதியில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்திய போராட்டத்தின் விளைவாக இதுவரை 106 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கும் இந்நிகழ்வில் சிபிஎம் மணலிசேக்காடு பகுதி செயலாளர் சிட்டிபாபு, இரா.ராஜவர்மன், அண்ணாதுரை, பெரிய சேக்காடு கிளைச் செயலாளர் ருக்மாங்கதன், ரவி, மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.