tamilnadu

ஸ்டெர்லைட் வழக்கிலிருந்து நீதிபதி சசிதரன் திடீர் விலகல் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வுக்கு மாற்றம்

சென்னை, ஜூன் 11- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அம்மாவட்ட  மக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய  துப்பாக்கி சூடு, தடியடி சம்ப வத்தில் 13 உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டன. இதனையடுத்து, அந்த ஆலையை மூட வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர் லைட் ஆலைக்கு கடந்தாண்டு சீல்  வைக்கப்பட்டது. அரசின் இந்த நட வடிக்கையை எதிர்த்தும் ஆலையை  மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி யும் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி கள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்  கிய அமர்வு விசாரிக்கும் என உயர் நீதிமன்றம் பட்டியலிட்டிருந்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  சசிதரன் விலகியுள்ளார். ஸ்டெர் லைட் வழக்கில் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்த ரவு பிறப்பித்திருப்பதால் தற்போது  இந்த வழக்கை விசாரிக்க விரும்ப வில்லை என அவர் விளக்கம் அளித்  துள்ளார். வழக்கை வேறு அமர் வுக்கு மாற்றவும் தலைமை நீதி பதிக்கு, நீதிபதி சசிதரன் பரிந்துரை செய்துள்ளார். நீதிபதி சசிதரன் வில கியதால், இந்த வழக்கை வேறு அமர்  வில் பட்டியலிடுமாறு தலைமை  நீதி பதியிடம் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.  இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பு ராயன் அமர்வு விசாரிக்கும் என  உயர்நீதிமன்ற பதிவாளர் அறி வித்திருக்கிறார்.