அலங்காரமங்கலம் மயானத்திற்கு சாலை அமைக்க நடவடிக்கை
திருவண்ணாமலை,மே 19- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அலங்கார மங்கலம் ஊராட்சி மன்றத்தில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. தனி நபர்க ளின் கரும்பு பயிர்கள் வழி யாகத்தான் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அலங்கார மங்கலம் கிராமத்தில் மயா னத்திற்கு சாலை வசதி கேட்டு கடந்த 16 ஆம் தேதி கலசப்பாக்கத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு வின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர், அலங்கார மங்கலம் கிராமத்தில் வழி பாதை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு கருத்துருவை அனுப்பி வைத்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி .சுந்தர், எ. திரு முருகன், எம் .பழனி, விவசாயி கள் சங்க நிர்வாகிகள் சாமிக் கண்ணு, சுப்பிரமணி, சிவ குமார் ஆகியோர் உடனி ருந்தனர்.