கடலூர், செப். 9- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட 3 ஆவது மாநாடு கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கக் கட்டடத்தில் மாவட்டத் தலைவர் கோ.பழநி தலைமையில் நடைபெற்றது. சங்கக் கொடியை மூத்த உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஏற்றி வைத்து பின்னர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். மாநிலச் செயலாளர் டி.புருஷோத்தமன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் அறிக்கையும், பொருளாளர் வி.சுந்தரராஜன் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தனர். அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் பி.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் எல்.அரிகிருஷ்ணன், பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஜி.ராமச்சந்திரன், ஆர்.நடராஜன், ச.சிவராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.முன்னதாக மாவட்ட இணைச் செயலர் என்.காசிநாதன் வரவேற்க, துணைத் தலைவர் கோ.ஆதவன் நன்றி கூறினார். புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்டத்தி லுள்ள அனைத்து ஏரிகள், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும். கட லூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், மாவட்டத்திலுள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும். கடலூர்-புதுவை ரயில் பாதையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
சி.குழந்தைவேலு, செயலாளராக டி.மகா லிங்கம், எஸ்.கருணாகரன், இரா.ராஜேந்தி ரன், ஆர்.தனுசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.