tamilnadu

img

மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணி இடைநீக்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதையும், துணைத் தலைவர் மு.சுப்பிரமணி உள்ளிட்ட 4 செவிலியர்கள் மீதான பணியிடை நீக்கத்தையும் திரும்ப பெற வேண்டும், அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (அக்.11) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் எழிலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டேனியல் ஜெயசிங் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் ஆர்.என்.நம்பிராஜன், மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார் உள்ளிட்டோர் பேசினர்.