சென்னை, ஜூன் 30- அரக்கோணத்தில் புதிதாக அதிநவீன ரயில்வே சரக்கு முனையம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சரக்கு ரயில் சேவையின் உள்கட்டமைப்பை மேம்படுத் தும் வகையில் கதி சக்தி பன்னடுக்கு சரக்கு முனையும் திட்டத்தின் கீழ் முக்கிய ரயில் நிலையங்களில் சரக்கு முனை யம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சுமார் 1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரயில்வே சரக்கு முனையம் அமைக்கப் பட உள்ளது. இதற்காக ஜேஎஸ்டபிள்யூ இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள இந்த சரக்கு முனையத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நிற்பதற்கான வசதி சரக்குகளை கையாளுவதற்கான தளங்கள், நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இந்த முனையத்தில் ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் டன் சரக்குகள் கையாளக்கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்த முனையம் பயன்பாட்டிற்கு வரும்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் இந்த பகுதியின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும். இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனம் சுமார் ரூ.50 கோடி வரை முதலீடு செய்ய உள்ளது. இந்த கட்டமைப்புகளை கையாள அந்த நிறுவனத்திற்கு 35 ஆண்டுகள் ஒப்பந்தம் காலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.