tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாநில அவசரகால  செயல்பாட்டு மையம்
முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை, ஆக. 22 - சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்பாட்டு வரும் மாநில அவசர கால  செயல்பாட்டு மையம் ரூ. 512 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. இதனை வியாழக் கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இந்த மையம் 10,000 சதுர அடி பரப்பில் தரம்  உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் 3 பேர் கைது!

சென்னை, ஆக. 22 - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே 24 பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது ராஜேஷ், கோபி, குமரன் ஆகி யோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் புதூர் அப்பு, சம்பவம் செந்தில் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடன் தொடர் தொடர்பில் இருந்தவர்கள் என்று  கூறப்படுகிறது.

முத்தமிழ் முருகன் மாநாடு: அனுமதி இலவசம்

திண்டுக்கல், ஆக. 22 - தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 24 மற்றும் 25  தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்த மிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளா கத்தில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், மாநாட்டிற்கு வருகை தரும் அனைத்துப் பொது மக்களும் எளி தாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம் என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களை கட்டுப்பாட்டு அறை  தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண்-1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

106 ரயில் நிலையங்களில் கியூ ஆர் கோடு வசதி!

சென்னை, ஆக. 22 - ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஆப்களை பயன்படுத்தி கியூ ஆர் கோடு மூலம் எளிதில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கியூ.ஆர். கோடு வசதியானது மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை, விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோ வில், நாசரேத், திருச்செந்தூர், ஸ்ரீவை குண்டம், பாளையங்கோட்டை, ஆழ்வார் திருநகரி, செங்கோட்டை, தென்காசி, சேரன்மகாதேவி, பாவூர்சத்திரம், தூத்துக்குடி, மீளவிட்டான், பழனி உள்ளிட்ட 106 ரயில் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளன.

ஆருத்ரா கோல்டு நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை, ஆக. 22 - ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான திருச்சி கிளை நிர்வாகியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களிடம் ரூ. 2 ஆயிரத்து 438 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர்.  

இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருச்சி கிளையின் நிர்வாகியான சூசைராஜ் என்பவர் இரண்டாவது முறையாக மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் சூசைராஜூக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சூசைராஜ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.