சென்னை, மே 20-கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருத்து கணிப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், “ ஊடங்களில் வரக்கூடிய கருத்துக் கணிப்புகளை பொறுத்தவரை திமுக-வுக்கு சாதகமாக வந்தாலும், ஒரு வேளை பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத் துவது இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை” என்றார்.இன்னும் 3 நாட்களில் மக்களுடைய கணிப்பு என்ன என்பது தெளிவாக தெரியப் போகிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் மதச் சார்பற்ற கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பாஜகவின் ஏற்பாடு: கே.எஸ்.அழகிரிதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது,“ மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதக் கூடிய ஒரு மாற்றம் வரவிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத பாஜகவினர் கருத்து கணிப்பு என்று தவறான தகவலை பரப்பியிருக்கிறார்கள்” என்றார்.எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். இந்தத் தேர்தலில் மோடி இல்லாத ஒரு அரசு தான் அமையும். தமிழ்நாட் டில் 38 தொகுதிகளில் புதுச்சேரியிலும் திமுக-காங்கிரஸ் கூட்ட ணியே வெற்றி பெறும். ஆனால், கருத்துக் கணிப்பில் ஒரு நிறுவனத் துக்கும் இன்னொரு நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சுமார் 100 இருக்கிறது. உண்மையான கணிப்பு என்றால் 5 தொகுதிகள்தான் வித்தியாசம் இருக்கும். தில்லியில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதை மனதில் கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதில் நம்பகத்தன்மை இல்லை. பாஜக ஏற்பாடு செய்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பாகவே தெரிகிறது என்றும் அவர் கூறினார்.