tamilnadu

img

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  பல ஆண்டுகளாக பதவி உயர்வின்றி பணியாற்றுகின்றவர்ளுக்கு குறைந்த ஈட்டுறுதி  வழங்க வேண்டும், பணி சீராய்வு நடத்தப்பட்ட நிலையில் அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி செவ்வாயன்று (ஆக.20) ராயப்பேட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அகில இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளன பொதுச் செயலாளர் எம். துரைபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.