tamilnadu

img

அரசு பேருந்தில் பயணித்தால் சிறப்பு பரிசு!

அரசு பேருந்தை முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ள்து.

பொங்கலை முன்னிட்டு வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்கள் என பலர், அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, பலரும் தனது போக்குவரத்திற்காக பேருந்து பயணத்தை மேற்கொள்வர். அவ்வாறு, அரசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் பொதுமக்களுக்கு, அரசு போக்குவரத்துக்கழகம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, நவ.21 முதல் ஜன.20 வரை பயணம் செய்ய டி.என்.எஸ்.டி.சி(TNSTC) இணையதளம் மற்றும் செயலி மூலமாக பேருந்து முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது, முதல் பரிசாக இருசக்கர வாகனமும், இரண்டாம் பரிசாக எல்.இ.டி டிவியும், மூன்றாவது பரிசாக குளிர்சாதன பெட்டியும் வழங்கப்படும் என அறிவிப்பு விடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு சிறப்பு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.