சென்னை, மே 30-சில மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்துக் காணப்படும் என்றும், சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் இரண்டு நாட்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். உள் மாவட்டங்களில் வெள்ளியன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். குறிப் பாக நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அனல் காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.அடுத்த இரண்டு நாட்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல் வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். சென் னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் கூடலூரில் 9 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.