சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி “முகிலன் எங்கே?’ என்ற முழக்கத்தோடு சனிக்கிழமையன்று (ஜூன் 1) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பூங்கொடி முகிலன் உள்ளிட்டோர் பேசினர்.