சென்னை,பிப்,28- சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணி கள் விமானம், 182 பயணி களுடன் செவ்வாயன்று (பிப்.27) நள்ளிரவு சென்னை க்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் பயணம் செய்து கொண்டி ருந்த சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சுதர்சன் (36) என்ற பயணி, திடீரென விமானத் திற்குள் புகை பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, விமானப் பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் சுதர்சன் செயல்பாடு குறித்து புகார் செய்துள்ளனர். இந்த நிலையில், விமானம் நள்ளி ரவு 12 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத் தில் வந்து தரையிறங்கி யதும், அவரிடம் அதிகாரி கள் விசாரணை நடத்தினர்.