சென்னை,செப்.17- பெண் திரைப்படக் கலைஞர்கள் மீது ஆபாசமான அவதூறு பரப்பும் மருத்து வர் காந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் ஆகி யோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயகம் மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா,மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சமீப காலமாக காந்தராஜ் என்பவரும் பயில்வான் ரங்கநாதன் என்பவரும் தொடர்ச்சியாக யூ டியூப் சேனல்களில் அரு வருக்கத்தக்க, ஆபாசமாக, பெண் திரைப்படக் கலைஞர்கள் குறித்து பாலியல் ரீதியான அவதூறுகளை பரப்பி வரு கின்றனர்.
பெண் திரைப்படக்கலைஞர்கள் வாய்ப்புக்காக பாலியல் சமரசங்களை செய்து கொள்கிறார்கள் என்றும், பாலியல் சமரசம் செய்தே ஆடம்பர வசதி யான, வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும், பெண் திரைப்பட கலைஞர்களை கண்ணியக் குறைவாகவும் மரியாதை குறைவாகவும் திரைப்படத் துறையில் பணி யாற்றும் பெண்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர்.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து முன்னேறி வருகின்றனர். அதுபோலவே திரைப்படத் துறையிலும் பணிச் சூழல் காரணமான கடும் இன்னல்களை எல்லாம் தாண்டி எந்தவித நேர கட்டுப்பாடும் இல்லாமல் உழைத்து வருகின்றனர். திரைப்படத்தில் நடிப்பது என்பது தொழில் என கருதாமல் ஆடம்பரமான வாழ்க்கைக்காக என பெண் கலைஞர்களை மட்டுமே குறிவைத்து ஆணாதிக்கச் சிந்தனையின் உச்சபட்ச கருத்துகளை சமூகத்தின் பொது புத்தியில் திணிக்கக்கூடிய இத்தகைய செயலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் இத்தகைய அவதூறு பிரச்சா ரங்களை தடுக்கும் வகையில் சம்பந்தப் பட்ட நபர்கள் மீது கடுமையான பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்ட னைக்கு உட்படுத்த வேண்டும்.
பெண் திரைப்பட கலைஞர்களின் பாதுகாப்பிற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உறுதுணையாக நிற்கும்.
தென்னிந்திய நடிகர் சங்கம் உள் புகார் கமிட்டி குறித்து திரைப்பட கலை ஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்திட வேண்டும்.
தமிழக மகளிர் ஆணையமும் மேற்கண்ட சம்பவத்தில் தலையீடு செய்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தராஜுக்கு சம்மன்
நடிகைகளை பற்றி யூடியூப் சேனல் களில் மருத்துவர் காந்தராஜ் அவ தூறாக பேசுவதாக திரைக் கலைஞர் ரோகிணி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகு மாறு மருத்துவர் காந்தராஜூக்கு சைபர் கிரைம் காவல்துறை சம்மன் அனுப்பியது.